அன்புள்ள முதுகலை ஆசிரிய தோழர்களே தோழியர்களே அனைவருக்கும் வணக்கம்.
கல்வித்துறையில் மேல்நிலைக்கல்வி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நமது இயக்கம் அனைத்து போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வதிலும் ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் முதன்மையாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வதிலும் நாமே முதன்மையாக உள்ளோம் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலும் நமது இயக்க நிகழ்வுகளை உலகறியச் செய்யவும், வேறெந்த ஆசிரியர் இயக்கங்களும் செய்யாத ஒரு பணியை நம் செய்துள்ளோம். அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ. வருங்காலங்களில் இந்த வலைப்பூ கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தப் போகிறது என்பது மட்டும் நிதர்சனம் இந்த வலைப்பூவை துவங்க எனக்கொரு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வலைப்பூ துவங்க அனுமதி வழங்கிய நமது மாநிலத் தலைவர் திரு வே.மணிவாசகன் அவர்களுக்கும் இதை உருவாக்குவதில் உறுதுணையாய் இருந்துவரும் தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் எனது நன்றிகள் பல. இதை படித்தும், பார்த்தும் உங்கள் பின்னூட்டங்களையும் படைப்புகளையும் கருத்துகளையும்
melnilaikkural@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9942618399 என்ற செல்பேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
என்றும் அன்புடன்
இரா.சீனிவாசன். தர்மபுரி கல்வி மாவட்ட செயலர்
No comments:
Post a Comment