ஊதிய முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் தமிழ்நாடுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் அருகே சனி ஞாயிறு இருநாட்களும் ஆர்பாட்டம்நடைபெற்றது
ஊதிய முரண்பாட்டை நீக்கவேண்டும்,மேல்நிலைக்கல்விக்கு தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும். பதவி உயர்வுக்கு தடையாக இருக்கும் அரசாணை 720 ஐ திருத்தம் செய்ய வேண்டும் .2003-04 ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
பின்னர் தருமபுரி சேலம் புறவழிச் சாலையில் மறியலில் நடைபெற்றது.முதல் நாள் சுமார் 250 பேரும் இரண்டாம் நாள் 250 பேரு போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். மாவட்ட அமைப்பாளர் அர. முனியன், நிதிகாப்பாளர் மு.பொன்முடி, செய்தித் தொடர்பாளர் மு.சரவணன் மாநில சட்ட ஆலோசகர் இராமச்சந்திரன் ஆகியோர் வழிநடத்தினர்.
ஊதிய முரண்பாட்டை நீக்கவேண்டும்,மேல்நிலைக்கல்விக்கு தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும். பதவி உயர்வுக்கு தடையாக இருக்கும் அரசாணை 720 ஐ திருத்தம் செய்ய வேண்டும் .2003-04 ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
பின்னர் தருமபுரி சேலம் புறவழிச் சாலையில் மறியலில் நடைபெற்றது.முதல் நாள் சுமார் 250 பேரும் இரண்டாம் நாள் 250 பேரு போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். மாவட்ட அமைப்பாளர் அர. முனியன், நிதிகாப்பாளர் மு.பொன்முடி, செய்தித் தொடர்பாளர் மு.சரவணன் மாநில சட்ட ஆலோசகர் இராமச்சந்திரன் ஆகியோர் வழிநடத்தினர்.
தருமபுரி செய்திகள் மட்டும்தான் இடம்பெறுமா?
ReplyDeleteall news can be uploaded, please send your articles and news to melnilaikkural@gmail.com
ReplyDelete